மும்பை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு ஊழியர்களுக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற உள்ள புதுமையான மாரத்தான் ஓட்டத்தில் பேட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த், அர்ஜுனா விருது பெற்ற தடகள வீராங்கனை அஷ்வினி நாச்சப்பா மற்றும் பாரா தடகள வீராங்கனை மாலதி ஹொல்லா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.‘ரன் டு தி மூன்’ என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு, ஜூலை 21, 2020 அன்று, மனிதன் சந்திரனில் கால் பதித்த 51ம் ஆண்டு விழாவை குறிக்கிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரமான 3,84,400 கி.மீ. அளவுக்கு பங்கேற்பாளர்கள் ஒட்டுமொத்தமாகக் கடப்பதே இந்த ஓட்டத்தின் பின்னனியில் உள்ள கருத்தாகும். இந்த ஓட்டம் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி, ஜூலை 20 ஆம் தேதி நிறைவு பெறும். மேலும், தொழில்முறை மற்றும் தொழிற்சாரா ஓட்டப்பந்தய வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.