களக்காடு: களக்காட்டில் உயிரிழந்த ஆதரவற்ற மூதாட்டியின் உடலை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தகனம் செய்தனர். நெல்லை மாவட்டம், களக்காடு கோட்டை யாதவர் கீழத்தெருவை சேர்ந்தவர் முத்தையா மனைவி பத்மா (62). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முத்தையா இறந்ததால் பத்மா தனியாக வசித்து வந்தார். ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வந்த அவர் உடல்நல குறைவு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடலை தகனம் செய்ய யாரும் முன்வரவில்லை.
இதனையறிந்த களக்காடு நகர எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மூதாட்டியின் உடலை தகனம் செய்ய முடிவு செய்தனர்.