மதுரை: சினிமாவில் நடிகர் வடிவேலுவைக் கடித்த நாய்கள் செத்ததைப்போல, கொரோனா நம்மை கண்டு பயந்து ஓடும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி கலகலப்பு ஊட்டினார். மதுரையில் நேற்று நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வது வருத்தமளிக்கிறது. ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால், அங்குள்ள தெய்வங்கள் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்கள். ஆண்டவனுக்கு இணையானவர்கள் மருத்துவர்கள். அதனால் ஆண்டவனே, ‘என்னை வணங்க வேண்டாம், மருத்துவர்களை வணங்குங்கள்’ என்றே கூறுவார். அனைவருக்குமே ஆண்டவன் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையிலேயே கொடுத்திருப்பதால், கொரோனா நம்மை அண்டவே அண்டாது.