மதுரை: மதுரை, ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (70). இவரது மகள் பிரியா. இவர் சென்னையில் உள்ளார். இவரை பார்க்க கஸ்தூரி சென்னை சென்றார். அங்கிருந்து மீண்டும் மார்ச் 18ம் தேதி ரயிலில் மதுரை புறப்பட்டார். மதுரை வந்தபோது, இவர் தூங்கிவிட்டார். இதனால் ரயில் கேரள மாநிலம், கொல்லத்திற்கு சென்று விட்டது. அங்கு அனைவரையும் இறங்க சொல்லி உள்ளனர். அப்போது கஸ்தூரியும் இறங்கி ‘இது மதுரை இல்லையே’ எணன திைகத்தபடி நின்றுள்ளார். அவரிடம் கேரள போலீசார் விசாரித்தனர். இவருக்கு மலையாளம் தெரியவில்லை. போலீசாருக்கு தமிழ் புரியவில்லை. இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று முதலில் துவங்கியதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதையடுத்து மூதாட்டியை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி மனநல மருத்துவமனையில் போலீசார் சேர்த்து விட்டனர்.