தஞ்சை: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி சானூரப்பட்டி பிரிவு அருகே கடந்த 1ம் தேதி மதியம், உடலில் காயங்களுடன் ஒரு பெண் கிடந்தார். போலீசார் மீட்டு விசாரித்தனர். அதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் என்பதும், பெங்களூருவில் பெற்றோருடன் வசித்து வந்ததும், தஞ்சையில் வீட்டு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதும், இங்கு வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு, காரில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக தஞ்சையைச் சேர்ந்த செந்தில்குமார்(49), இவரது மனைவி ராஜம் (49), பிரபாகரன் (63), ராமச்சந்திரன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில், மேலும் ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். அவர் புதுக்கோட்டையை சேர்ந்த பழனிவேல் (53) ஆவார். பாலியல் தொழில் நடந்து வந்த 3 வீடுகளுக்கும் போலீசார் சீல் வைத்தனர். பிடிபட்டவர்கள், பாலியல் தொழிலை கடந்த 4 ஆண்டுகளாக ஹைடெக் முறையில் செய்து வந்துள்ளனர். இதுபற்றி கிடைத்துள்ள திடுக்கிடும் தகவல்கள் வருமாறு: