சிவகாசி: சிவகாசி அருகே நடையனேரியில் மழையால் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து விழுந்தது. சிவகாசி அருகே நடையனேரியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகின்றது. 1 முதல் 3 வகுப்பு வரை உப்புகாச்சி ஓடை அருகில் உள்ள கட்டிடத்திலும் சுமார் 300 மீட்டர் தூரத்தில் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் 4, 5ம் வகுப்புகள் ஒரு கட்டிடத்திலும் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு பள்ளி கட்டிடமும் கடுமையாக சேதமடைந்த நிலையில்தான் செயல்பட்டு வந்தது. இதில் பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள 4, 5 வகுப்புகள் நடைபெறும் பள்ளி கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பழைய கட்டிடத்தை அடிக்கடி மராமத்து செய்து வந்துள்ளனர். இருந்த போதிலும் கட்டிடம் அபாய நிலையில் இருந்துள்ளது.