திருவனந்தபுரம்: கேரளாவில் லாக்டவுனால் நிறுத்தப்பட்டிருந்த லாட்டரி குலுக்கல் நேற்று முதல் தொடங்கியது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கேரளாவில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் லாட்டரி விற்பனை மற்றும் குலுக்கல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பின்னர் லாட்டரி விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் குலுக்கல் நடக்காமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் லாட்டரி குலுக்கல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதுபோல கேரளாவில் பொதுமுடக்கத்தை தொடர்ந்து 66 சினிமாக்களின் படப்பிடிப்பு, எடிட்டிங், டப்பிங் உட்பட பல பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.