ம.பி. 24 தொகுதி இடைத்தேர்தல் பிரசாந்த் கிஷோருடன் கைகோர்க்கிறது காங்.

போபால்: மத்திய பிரதேசத்தில் 24 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் வெற்றிப் பெற, தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரின் உதவியை காங்கிரஸ் நாடுகிறது.

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெறுகிறது. இங்கு மொத்தம் 230 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து விலகியபோது அவருடன் சேர்ந்து 22 எம்எல்ஏ.க்கள் பதவி விலகினர். இரண்டு எம்எல்ஏ.க்கள் உடல்நலக் குறைவினால் காலமாகினர். இதனால், இங்கு சட்டப்பேரவையின் பலம் 206 ஆக உள்ளது.  

இதனிடையே, இங்கு காலியாக உள்ள 24 தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் பற்றி. தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் காங்கிரஸ் ஆலோசிக்க உள்ளதாக அக்கட்சியின் எம்எல்ஏ சர்மா தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில், `தேர்தல் வியூகம் பற்றியும், சமூக வலைதளங்களில் பயன்படுத்த வேண்டிய பிரசார உத்திகள், வேட்பாளர்கள் தேர்வு குறித்த விவகாரங்களில் அவர் ஆலோசனை வழங்குவார் என்றார்.

Related Stories: