போபால்: மத்திய பிரதேசத்தில் 24 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் வெற்றிப் பெற, தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரின் உதவியை காங்கிரஸ் நாடுகிறது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெறுகிறது. இங்கு மொத்தம் 230 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து விலகியபோது அவருடன் சேர்ந்து 22 எம்எல்ஏ.க்கள் பதவி விலகினர். இரண்டு எம்எல்ஏ.க்கள் உடல்நலக் குறைவினால் காலமாகினர். இதனால், இங்கு சட்டப்பேரவையின் பலம் 206 ஆக உள்ளது.