டெல்லி : கொரோனா பாதிப்புகளால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக சிறப்பு படுக்கை வசதிகளை கொண்ட ரயில் பெட்டிகளை டெல்லி அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ரயில்வே வாரியம் அனுப்பியது. கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மருத்துவமனைகளும், தனிமை மையங்களும் போதாத நிலை ஏற்பட்டதால்,
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ரயில்பெட்டிகளில் சிறப்பு படுக்கை வசதிகளை அமைத்து கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டது.