தண்டையார்பேட்டை: பாரிமுனை பூக்கடை காவல் நிலையம் அருகே சாலையோரத்தில் கோபி (39) என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை பூக்கடை காவல்நிலைய உதவி ஆய்வாளர் கோட்டீஸ்வரன் ரோந்து வாகனத்தில் அங்கு சென்றபோது சாலையோர கடையை மூடும்படி கோபியிடம் கூறினார். அதன்படி கடையை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போதே, ஆத்திரம் அடைந்த உதவி ஆய்வாளர், “வேகமாக மூடு” என்று கூறி கோபியை தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது கடைக்கு வந்த கோபியின் சகோதரி காவேரி (25) உதவி ஆய்வாளரை தகாத வார்தையால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த உதவி ஆய்வாளர், இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து தாக்கியதாக தெரிகிறது. இதில் காவேரிக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.