திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் இருந்து சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு 14 இளைஞர்கள் டூவீலர்களில் 2,142 கிமீ பயணம் மேற்கொண்டுள்ளனர்
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பகுதியில் ராஜஸ்தான், பீகார், லக்னோ என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வடமாநில இளைஞர்கள் வீடு எடுத்து தங்கி குல்பி ஐஸ், பானி பூரி, கூல்டிரிங்ஸ் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக அவர்களால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இதனால் உணவு கிடைக்காமல் தவித்தனர். இதனால் வடமாநில இளைஞர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்தனர்.