திருவனந்தபுரம்: பஸ் போக்குவரத்து தொடங்கிய முதல் நாளில் கேரள அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முதல்நாள் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஆலப்புழா, கொச்சி உட்பட முக்கிய நகரங்களில் பஸ்கள் இயக்கப்பட்டன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பஸ்கள் ஓடின. பெரும்பாலான பஸ்களில் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இதன் காரணமாக முதல் நாளிலேயே கேரள அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.