தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், மானாவரி மற்றும் கிணற்று பாசனத்தை நம்பியே விவசாயம் நடந்து வருகிறது. இம்மாவட்டம் தக்காளி, வெண்டை, கத்திரி, பூசணி, பப்பாளி, குடை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் விளைவிப்பதில் தமிழகத்திலேயே முதலிடம் வகிக்கிறது. தர்மபுரி, பென்னாகரம், காரிமங்கலம் ஒன்றியங்களில் வெண்டைக்காய் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இண்டூர், கிருஷ்ணாபுரம், செம்மாண்டகுப்பம், பாலக்கோடு, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி ஆகிய மொத்த வியாபார மண்டிகளில், வெண்டைக்காய்களை விவசாயிகள் மொத்தமாக விற்பனை செய்கின்றனர். இது கேரளா மற்றும் பெங்களூருக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.