காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ஸ்ரீநகர் பகுதியில் மொபைல் இணைய சேவைகள் துண்டிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நவகாடல் பகுதியில் பாதுகாப்பு பணியை வழக்கம் போல் மேற்கொண்டு வந்தனர்.  அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து பதிலடி தரும்வகையில் பாதுகாப்பு படையினரும் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தீவிரவாதிகள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஸ்ரீநகர் பகுதியில் மொபைல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

Related Stories: