லண்டன்: சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் ஜூலை 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனாவால் மார்ச் மாதம் முதல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏடிபி மற்றும் டபிள்யூடிஏ இணைந்து ஜூலை 13ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏப்ரலில் அறிவித்தன. தொற்று அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐடிஏ) ஜூலை 31 வரையிலான அனைத்து போட்டிகளும் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இது குறித்து ஏடிபி தலைவர் கவுடென்சி , ‘சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், தள்ளி வைக்கப்பட்டுள்ள போட்டிகள் மீண்டும் பாதுகாப்பாக நடத்துவதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறொம்’ என்று கூறியுள்ளார்.