பொது இடங்களிலும், பணியிடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மத்திய அரசு

டெல்லி: பொது இடங்களிலும், பணியிடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடைகளுக்குள் 6 அடி இடைவெளியில் வாடிக்கையாளர்கள் நிற்கலாம்; 5 பேருக்கு மேல் நிற்க அனுமதியில்லை. வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அலுவலகங்களில் வெப்ப சோதனை, கை கழுவுதல் அவசியம் எனவும் கூறியுள்ளது.

Related Stories: