திருமலை: ஆந்திராவின் தாடேபல்லி வழியாக புலம்பெயர்ந்த கூலித்தொழிலாளர்கள் நேற்று முன்தினம் மாலை தங்கள் ஊருக்கு நடந்தபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் சென்ற மாநில முதன்மை செயலாளர் நீலம் சஹானி, நடந்து சென்ற கூலித் தொழிலாளர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர்கள் அனைவரையும் விஜயவாடாவில் உள்ள முகாமிற்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் நேற்று காலை உணவு பெற்றவுடன் 150க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் விஜயவாடா முகாமில் இருந்து வெளியேறினர்.