10ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு ஒத்திவைக்க வேண்டும்: சரத்குமார் வேண்டுகோள்

சென்னை:  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். கொரோனா பரவல் அச்சத்தால், மாணவர்கள், பெற்றோர்களுடன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில், பயணிகள் ரயில் இயக்கம் இல்லாததாலும், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டதாலும், மாணவர்களுக்கென ஒதுக்கப்படும் தேர்வு மையத்திற்கு தற்போதைய சூழலில் அவர்கள் திரும்பி வந்து தேர்வு எழுதுவதில் சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன் கருதி அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வு தேதியை ஒத்தி வைப்பதற்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலிறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: