சொல்லிட்டாங்க...

39 ஆண்டுகளாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தும் சட்டங்களை உருவாக்குவது மட்டும் பாதிக்கப்படவில்லை. - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

கடந்த 30 ஆண்டுகளாக விவசாயிகள் பெற்று வருகிற இலவச மின்சாரம் என்பது சலுகையல்ல, அது ஒரு உரிமை. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சமூகநீதி கோட்பாட்டை நீர்த்துப்போக செய்யும் வகையில், மத்திய பாஜ அரசு தொடர்ந்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு அநீதி இழைக்கிறது. - மதிமுக ெபாதுச்செயலாளர் வைகோ

நிதியமைச்சர் ஊக்குவிப்பு திட்டத்தை நாடே ஆவலுடன் எதிர்பார்த்தது. ஆனால், பிரதமர் ஏற்படுத்திய நம்பிக்கையை நிதியமைச்சரின் அறிவிப்பு தகர்த்துவிட்டது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Related Stories: