சியோல்: தென்கொரியாவில் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 256 பேர் பலியாகியுள்ளனர். 10,909 பேர் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் தென்கொரியாவில் இயல்பு நிலை திரும்பி வந்த நிலையில் இரண்டாவது முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியுள்ளது. கொரோனாவின் இந்த 2வது அலைக்கு, நைட் கிளப்புகள் காரணம் என தெரியவந்துள்ளது. இங்குள்ள இடவோன் நகரில் பல்வேறு நைட் கிளப்புகள் உள்ளன. இதில் கிளப்புகள் மற்றும் 5 இரவு விடுதிகளில் தங்கியிருந்த 29 வயது நபருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து நடந்த மருத்துவ சோதனையில் நேற்று முன்தினம் மட்டும் 34 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 24 பேர் இடவோன் இரவு விடுதியுடன் தொடர்புடையவர்கள். தொற்று குறைந்த வந்த நிலையில் 2வது முறையாக கொரோனா தொற்று பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.