ஊரடங்கில் காதலனுடன் ஊர்சுற்றிய நடிகை கைது

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தும் பரபரப்பான நடிகை. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் பூனம் பாண்டே விலை உயர்ந்த வெளிநாட்டு சொகுசு காரில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் மும்பையின் பாந்த்தராவில் இருந்து மரைன் டிரைவ் பகுதிக்கு சென்றுள்ளார். அவரை மரைன் டிரைவ் பகுதி போலீசார் தடுத்து நிறுத்தினர். அவரிடம் சோதனை செய்தபோது அவரிடம் எந்தவித அனுமதியும் இல்லை. ஜாலிக்காக ஆண் நண்பருடன் காரில் சுற்றியது தெரியவந்ததது.

காரில் இருந்தது அவரது காதலர் என்பதும் தெரியவந்தது. உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது அரசு விதிகளை மீறுதல், நோய் பரவலுக்கு காரணமாக இருந்தல் பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தனர். அவரது காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: