கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் ரசிகர்களை மகிழ்விக்க ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்கிறார்கள். அந்த வரிசையில் ஷாருக்கான் ரசிகர்களுக்கு வித்தியாசமான சவால் ஒன்றை விடுத்திருக்கிறார். அதாவது ரசிகர்கள் தங்களிடம் உள்ள செல்போனை கொண்டு. தங்கள் வீட்டை கதை களமாக கொண்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஓடும் ஒரு குறும்படத்தை எடுக்க வேண்டும்.
அது பயங்கர திகில் படமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஷாருக்கானை படம் பயமுறுத்த வேண்டும். வருகிற 18ந் தேதிக்குள் படத்தை ஷாருக்கானின் எஸ்.ஆர்.கே பிலிம்சுக்கு அனுப்ப வேண்டும். ஷாருக்கானை பயமுறுத்துகிற அளவிற்கு படம் எடுத்திருக்கும் ரசிகர்களை சந்திக்கிறார் ஷாருக்கான்.