டாஸ்மாக் கடைகளை திறக்க மேல்முறையீடு செய்ததை அரசு திரும்ப பெற வேண்டும்: டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: அமமுக பொதுச் செயலாளர்  டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை: மதுக்கடைகளை தொடர்ந்து நடத்த பழனிசாமி அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்துகிறேன்.  தமிழக மக்களின் ஜீவாதாரமான காவிரிப் பிரச்னையில்  பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான மத்திய அரசின் உத்தரவால் விவசாயிகள் கலங்கி நிற்கும் நிலையில், பொதுப்பணித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் பழனிசாமி அதனை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்திற்கு செல்லவில்லை.

ஆனால், மதுக் கடைகளை திறக்க உச்ச நீதிமன்றத்தை அவசரம், அவசரமாக நாடியிருக்கிறார்கள். மக்களின் உயிரோடு விளையாடும் வகையில், கோடிக்கணக்கான தாய்மார்கள் கண்ணீரில் மிதந்தாலும் பரவாயில்லை என்ற கொடூர மனப்பான்மையோடு மதுக்கடைகளை திறப்பதில் பழனிசாமி அரசு காட்டும் உறுதி வெட்கக்கேடானது.

Related Stories: