செங்கல்பட்டு: செங்கல்பட்டு தொகுதியில் திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் 7000 பேருக்கு நிவாரண உதவி வழங்கினார். செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய காரணைபுதுச்சேரி பெருமாட்டு நல்லூர் வண்டலூர் வெங்கடாபுரம் ஆலப்பாக்கம் அஞ்சூர் கொளத்தூர் ரெட்டிபாளையம் உள்ளிட்ட 39ஊரட்சிகளில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 7ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி,முககவசம், கிரிமிநாசினிகள் அடங்கிய தொகுப்பை மறைமலைநகரில் செங்கல்பட்டு திமுக எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் தனது சொந்த செலவில் நேற்று வழங்கினார். இதுகுறித்து எம்.எல்.ஏ.வரலட்சுமிமதுசூதனன் கூறுகையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.