ரோம்: இத்தாலியில் குணமான வீரர் உட்பட மேலும் 8 கால்பந்து ஆட்டக்காரர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இத்தாலியில் விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட, குழு பயிற்சிகளை தொடங்குவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனை உட்பட பல்வேறு சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் சீரி-ஏ தொடரில் விளையாடும் கால்பந்து கிளப்கள் அணிகளின் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று சோதனை செய்து வருகின்றனர். நேற்று 2 கிளப்களை சேர்ந்த ஒரு ஊழியர், 7 கால்பந்து வீரர்கள் என மொத்தம் 8 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் ஒரு வீரர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமாகி அணிக்கு திரும்பியவர்.