சென்னை: தென்காசி மாவட்டம் செட்டியார் கல்லூரணி கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா (22). தமிழக காவல் துறையில் கடந்த 2017ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக தேர்வு செய்யப்பட்டு, தற்போது எழும்பூர் புதுப்பேட்டை ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக சாந்தோம் பகுதியில் பள்ளி மாணவர்களின் விடைத்தாள் வைத்திருக்கும் கட்டிடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று ஆயுதப்படை உதவி கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, தனது மொபட்டில் பணிக்கு புறப்பட்டார். திருவல்லிக்கேணி பாரதி சாலையில் இருந்து மெரினா காமராஜர் சாலையில் வலதுபுறம் திரும்பியபோது, மேடவாக்கத்தில் இருந்து பாமாயில் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த டேங்கர் லாரி, பவித்ரா மீது மோதியது.