சீனாவின் வுகான் நகரில் உள்ள நுண்ணுயிரி ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா பரவியது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க ராணுவத்தின் ரிசர்வ் படையில் பணியாற்றும் வீராங்கனை பெனாசி என்பவர்தான் சீனாவின் வுகான் நகரில் கொரோனாவை பரப்பியவர் என அங்குள்ள ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்து பெனாசி கவலை தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘மார்ச் மாதத்தில் இருந்து இதுபோன்ற தகவல் பரவியுள்ளது. இதனால் எனக்கும் என் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. நான் வுகானில் நடந்த ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் அமெரிக்கா சார்பில் கலந்து கொண்டேன்.