கொலம்பியா: கொலம்பியாவில் அத்தியாவசியப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்ய ரோபோ வாகனங்களை கடை உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகில் கொரோனா நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 50 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 85 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. கொரோனா நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இதனால் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.