ஆரல்வாய்மொழி: கொரோனா வைரஸ் பீதியால் குமாரபுரத்தில் இருந்து வடக்கன்குளம் செல்லும் சாலையினை இளைஞர்கள் அடைத்தனர். நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக பரவி வருவதால் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவினை வருகிற 3ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்கிணறு, வடக்கன்குளம் பகுதியில் கொரோனா தாக்குதல் உள்ளதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது. இதனால் நேற்று காலையில் ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் பீதி: குமாரபுரம் - வடக்கன்குளம் சாலையை அடைத்த இளைஞர்கள்
- இளைஞர்கள்
- சாலை
- குமாரபுரம் - வடக்கங்குளம்
- கொரோனா வைரஸ் பீதி: குமாரபுரம் - வடக்கங்குளம் சாலையைத் தடுக்கும் இளைஞர்கள்