சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கபசுர குடிநீர் உள்ளிட்ட சித்த மருத்துவ பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். இதில் மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சித்த மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டிகளை பெற வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அதிகமான கூட்டம் காணப்பட்டது. அமைச்சர் பாஸ்கரன் சித்த மருத்துவ பொடி அடங்கிய பெட்டிகளை 10 பேருக்கு மட்டும் கொடுத்துவிட்டு சென்றார். கொரோனா தொற்றால் அத்தியாவசிய தேவைகளை கூட பெற முடியாத நிலையில் வீடுகளுக்குள் மக்கள் முடங்கி கிடக்கின்றனர்.