சென்னை: கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு மு.க.ஸ்டாலின் நேற்று பல்வேறு உதவிகளை வழங்கினார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், துறைமுகம் தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், 100 கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான 20 வகையான மளிகை மற்றும் உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.
தொடர்ந்து அவர் எழும்பூர் தொகுதிக்குட்பட்ட ஐந்து விளக்கு குயப்பேட்டையில் 200 மண்பாண்ட தொழிலாளர்கள், திரு.வி.க.நகர் தொகுதிக்குட்பட்ட டோபிகாணா பகுதியில் உள்ள 200 சலவைத் தொழிலாளர்கள், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கணினி பயிற்சி மேற்கொள்ளும் 200 பயனாளிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவிகளையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதி மக்களுக்கு உதவி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
- துறைமுகம்
- எழும்பூர்
- கொளத்தூர்
- ஆர்.வி.கே நகர்
- கொரோனா
- வில்லிவக்கம் தொகுதி
- எம்.கே. ஸ்டாலின்
- துறைமுக
- ஸ்ரீவங்கா நகர்