மூணாறு: மூணாறில் நேற்று அதிகாலை காட்டுயானை படையப்பா மீண்டும் ஊருக்குள் புகுந்து சாலைகளில் ஜாலியாக உலா வந்தது. வாழை மரங்களை நாசம் செய்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலம், மூணாறு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக முக்கிய சாலைகள் ஆள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்த யானைகள், விலங்குகள் வெளியேறி ஜாலியாக உலா வர துவங்கியுள்ளன. ‘படையப்பா’ என்று அழைக்கப்படும் காட்டுயானை 3 நாட்களுக்கு முன் காலனி மற்றும் அந்தோணியார் காலனி பகுதிகளில் நுழைந்து வாழை மரங்களை ஒடித்து நாசம் செய்தது. குடிநீர் குழாய்களையும் சேதப்படுத்தியது.