மயிலாடுதுறை அருகே ஆற்றுமணல் திருடியவர் போலீசை கண்டதும் ஓட்டம்: மினி லாரி பறிமுதல்

மயிலாடுதுறை: அரசு அனுமதியின்றி ஆற்றுமணல் ஏற்றிச்சென்றவர் மினி லாரியை விட்டுவிட்டு தப்பியோடினார்.மயிலாடுதுறை பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் திருட்டுமணல் கொள்ளை குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் தனிப்படை அமைத்துள்ளார். தனிப்படை சப்இன்ஸ்பெக்டர் பாபுராஜா மற்றும் போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் விடியற்காலையில் அக்களூர் கிராமப்பகுதி வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டபோது வேகமாகச்சென்ற மினிலாரி ஒன்றை நிறுத்தினர் போலீசைக் கண்டதும் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு அதன் ஓட்டுனர் தப்பியோடி விட்டார். போலீசார் லாரியை சோதனைசெய்தபோது அதில் ஆற்றுமணல் இருந்தது தெரியவந்தது. வாகனத்தைக் கைப்பற்றி மயிலாடுதுறை போலீசில் ஒப்படைத்தனர். மயிலாடுதுறை போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: