அழுதுகொண்டே வீட்டு வேலை செய்யும் நடிகை

சென்னை,: பஞ்சாப்பை சேர்ந்தவர் நடிகை பாயல் ராஜ்புத். பஞ்சாபி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். ஆர்எக்ஸ் 100 என்ற படத்தின் மூலம் தெலுங்கில் முன்னணி நடிகை ஆனார். தமிழில் ஏஞ்சல் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் காரணமாக தேசிய ஊரடங்கு அமலில் இருப்பதால், பாயல் ராஜ்புத் வீட்டில் தனியாக இருக்கிறார். வேலைக்கு ஆட்கள் வராததால், வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் அவரே செய்கிறார். அழுதுகொண்டே வீட்டை சுத்தப்படுத்தும் போட்டோவை வெளியிட்டுள்ள அவர், ‘நான் வேலைக்காரியை இழந்து நிற்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: