பிடிஓ அலுவலகங்களில் சுழற்சி முறையில் பணி: ஊழியர்கள் கோரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில்  ஊரக வளர்ச்சித் துறையின் உயர் அலுவலர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் பணிபுரியும் அலுவலர்களை தினமும் அலுவலகத்திற்கு வரும்படி உயர்அதிகாரிகள் கூறுகின்றனர். ஊரடங்கால் அனைத்து அலுவலகங்களும் மூடபட்ட நிலையில் தற்போது வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு மட்டும் வரச்சொல்கின்றனர். இதனால் ஊழியர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். எனவே மாவட்ட கலெக்டர்  உடனடியாக தலையிட்டு ஊழியர்களின் பாதுகாப்பு கருதி சுழற்சி முறையில் ஊழியர்களை பணியாற்ற சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிறப்பிக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: