புதுச்சேரி: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன்(65). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (60). புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்தார். ஆனால், கொரோனா வைரஸ் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் போக்குவரத்து வசதி நிறுத்தப்பட்டது. எப்படியாவது மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட எண்ணிய அவர் தனது பழைய சைக்கிளிலேயே மனைவியை பின்னால் அமர வைத்து புறப்பட்டார். குடிக்க தண்ணீரும், உண்ண சாப்பாட்டு பொட்டலமும் மருத்துவ பைலுமாய் கூடுதல் சுமையையும் சுமந்தபடி சென்றார். கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரிக்கு எவ்வளவு கிலோ மீட்டர் என்றுகூட அவருக்கு கணக்கு தெரியாது.