கேன்களில் டீ விற்பனை: போலீசார் எச்சரிக்கை

திருவள்ளூர்: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் பகுதியில் டீக்கடை உரிமையாளர்கள் சிலர், தங்களின் கடைகளின் முன், கேன்களில் வைத்து டீ விற்பனை செய்து வந்தனர். மேலும், சிலர் சைக்கிளில் வைத்தும் டீ விற்பனை செய்தனர். இதனால் டீ குடிக்க ஒரே இடத்தில் சமூக இடைவெளியின்றி பலர் குவிந்தனர். இதுகுறிந்த தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள், நகரின் முக்கிய பகுதிகளில், கேன்களில் டீ விற்பனை செய்தவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். 

Related Stories: