ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. இந்தவேளையில், மொளச்சூர் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மொளச்சூர் ஊராட்சி எல்லைகளை மூடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.