சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு வக்கீல்கள் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கடந்த ஒருவாரமாக கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவும் மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி அளிக்குமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள்.