கொரோனாவின் பிடியில் சிக்கி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நியூயார்க் வாழ் இந்திய வம்சாவளி வக்கீல் ரவி பட்ரா கூறுகையில், ``கொரோனாவில் இருந்து தப்பி மனித இனம் உயிர் வாழ வேண்டும். கொரோனாவின் ரிஷிமூலம் எது? கடந்தாண்டு இறுதியில் சீனாவில் எங்கிருந்து பரவத் தொடங்கியது என்ற அடிப்படை உண்மையை சீனா உலகிற்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அமெரிக்கா உள்பட உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அதற்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முடியும். அதுவரை, யாரும் வேலைக்கு, பள்ளிக்கு, விளையாட செல்ல முடியாது.