கடந்த 24 மணி நேரத்தில் 302 பேருக்கு பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3374 ஆக உயர்வு; 77 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3374ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 302 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் உலகளவில பலி எண்ணிக்கை 64,000ஐ தாண்டிய நிலையில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் 77 பேர் உயிரிழந்த நிலையில், 267 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்திராவில் 490 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 24 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 485 பேருக்கு தொற்று பாதிப்புடன் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லியில் 445 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 15 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 306 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 49 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 200 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 269 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 32 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 227 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 19 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 161 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 10 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

அசாமில் 24 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

பிகாரில் 30 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 18 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

சட்டிஸ்கரில் 9 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 3 பேர் குணமடைந்தது.

கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

குஜராத்தில் 105 பேருக்கு பாதிப்பு; 10 பேர் பலி; 14 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 49 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 24 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 6 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 92 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 4 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 144 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 14 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 104 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 6 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 20 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 5 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

பாஞ்சாபில் 57 பேருக்கு பாதிப்பு; 5 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 69 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.

Related Stories: