டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆங்காங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டறியப்பட்டு, தனிமை வார்டில் வைத்து கண்காணிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அனைத்து மாநில ஆளுநர்களுடன் காணொளி காட்சி மூலமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று, கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.