புதுடெல்லி: கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காப்பீடுகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணைய (ஐஆர்டிஏஐ) அதிகாரிகள் கூறியதாவது: காப்பீடு விதிகளின்படி, காப்பீடுகளை புதுப்பிக்காவிட்டால் அவற்றின் பலன்களை தொடர்ந்து பெற முடியாது. காப்பீடு சட்டம் 1938, பிரிவு 64விபி இந்த கட்டுப்பாட்டை விதிக்கிறது. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த 64விபி விதியில் நிதியமைச்சகம் திருத்தங்கள் செய்துள்ளது.