சென்னை: அத்தியாவசிய தேவைகளுக்கு உதவ திமுக இளைஞரணி தயாரக உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா கொடிய வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்தநிலையில், வைரஸ் மற்ற நாடுகளை போல், அழித்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இதனால், மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். மத்திய, மாநில அரசுகளும் நிதி ஒதுக்கி மக்களுக்கு சில சலுகைகளையும் அறிவித்துள்ளனர்.ஆனால், 21 நாள் திடீர் ஊரடங்கு என்பது, பணக்காரர்களுக்கு எந்த பாதிப்புமில்லாமல் இருந்தாலும், ஏழை, எளிய மக்கள், தினக்கூலிகள் என பலரை வறுமையில் தள்ளி உள்ளது. ஊரடங்கு 6 நாள் முடிந்த நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மற்ற நாட்களுக்கு உணவிற்கு என்ன செய்வதென்று அறியாமல் வறுமை வீதிக்கு வர தொடங்கியுள்ளது.