கொரோனா வைரஸால் ஹரித்திக் ரோஷனுக்கு ஏற்பட்ட நன்மை: அமிதாப் பச்சன், மோகன்லாலுக்கு ஏற்பட்ட சிக்கல்!!

மும்பை : கொரோனா வைரஸ் தொற்றால், நாடு முழுவதும் ஊரடங்கில் மூழ்கி உள்ள நிலையில், பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் ஒவ்வொரு வகையான அனுபவத்தை பெற்று வருகின்றன. இந்திய பிரபலங்களில் கொரோனாவால் மிகப்பெரிய அனுபவத்தை பெற்றவர் பாடகி கனிகா கபூர். வெளிநாடு சென்று வந்த போது, கொரோனவையும் கொண்டு வந்த இவர் அளித்த விருந்தில் கலந்து கொண்ட பலரும் கொரோனா பீதியால் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள நேரிட்டது.

இது தொடர்பாக கனிகா கபூர் மீது வழக்குப்பதிவு செய்யும் அளவிற்கு, விருந்து விபரீதமாகி உள்ளது. இந்தியாவின் உச்சநட்சத்திரம் என்ற பெருமைக்குரிய அமிதாப் பச்சன், கொரோனா ஊரடங்கு குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சனையானது. அதன் பின்னர் அமிதாப் பச்சன் தமது ட்விட்டர் பதிவை நீக்க நேரிட்டது. மலையாள நடிகர் மோகன்லால், சுய ஊரடங்கின் போது, மக்கள் கைதட்டி எழுப்பிய ஒலியை மந்திரம் என்றும் அது வைரஸ்களை அழித்திவிடும் என்று கூறியது நெட்டிசன்களின் கேலிக்கு உள்ளானது.

அறிவியல் பூர்வமானதாக இல்லாத தகவலை வெளியிட்ட மோகன்லால் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறைக்கும் புகார் சென்றுள்ளது. கொரோனா வைரஸால் மிகப்பெரிய நன்மை இந்தி நடிகர்  ஹரித்திக் ரோஷன் வாழ்க்கையில் நடைபெற்றுள்ளது. 2 மகன்களை  ஹரித்திக்கிடம் விட்டுவிட்டு கடந்த 2014ம் ஆண்டு விவாகரத்து பெற்றுச் சென்ற அவரது மனைவி சுசேன்னா தற்போது மீண்டும் ஹரித்திக் வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார். ஊரடங்கில் வீட்டில் முடங்கிய மகன்கள் தனிமையில் சோர்ந்து போகாமல் இருக்க சுசேன்னா இந்த முடிவை எடுத்துள்ளார். சுசேன்னா தமது வீட்டில் இருக்கும் புகைப்படத்தை ஹரித்திக் ரோஷன் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Related Stories: