பீஜிங்: கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் சீனாவில் ‘ஹண்டா’ என்ற வைரஸ் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலியிடம் இருந்து இது மனிதனுக்கு பரவுகிறது. சீனாவின் வுகான் நகரில் பரவிய கொரோனா வைரசின் தாக்குதல் உலகத்தையை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரசுக்கு உலகம் முழுவதும் 17 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவின் பிடியில் இருந்து தப்பிய சீனாவுக்கு, இப்போது புதிய தலைவலி ஆரம்பமாகி இருக்கிறது. இந்நாட்டில் புதிதாக ‘ஹண்டா வைரஸ்’ பரவத் தொடங்கியுள்ளது. ‘ஹண்டா வைரஸ் நுரையீரல் நோய்’ (எச்பிஎஸ்) எனப்படும் இந்த வைரஸ், நுரையீரல் தொடர்பான பிரச்னையை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தும். இது, ஏற்கனவே உள்ள பழைய வைரஸ் தான். எலிகள் மூலம் மனிதர்களுக்கு பரவும். இந்த வைரசால் பல்வேறு நோய்கள் ஏற்படும்.