பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பால் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், தொற்றுநோய் பீதியில் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். சென்னை திருவிக நகர் 6வது மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு ராமசாமி தெரு பகுதியில் உள்ளே பாடிசன்புரம் சந்து பகுதியில் இங்குள்ள மென்ஹோலில் இருந்து சுமார் ஓரு மாத்திற்கும் மேலாக கழிவுநீர் வெளியேறி குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியாக செல்பவர்கள் கழிவுநீரில் கால் வைத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த மென்ஹோலில் இருந்து கழிவுநீர் வெளியேறி அடிக்கடி குளம்போல தேங்கி நிற்கிறது.