ஸ்ரீநகர்: காஷ்மீரில் புத்தக வெளியீட்டு நிறுவனம் ஒன்று கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான தனிமை மையங்களுக்கு 1000 புத்தகங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது. காஷ்மீரில் தால் லேக் பகுதியில் உள்ள நேரு பூங்காவில் அமைந்துள்ளது குல்ஷன் புத்தக நிலையம். இங்கு 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளது. இந்நிலையில், காஷ்மீரில் கொரோனா தொற்று காரணமாக ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்துதல் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மையங்களுக்கு குல்ஷன் புத்தக நிலையம் 1,000 புத்தகங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது.