மும்பை: இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான தெடர், ஐபிஎல் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர்கள் தங்களது வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திவருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திரமாக சமீபகாலமாக திகழ்ந்துவரும் ஸ்ரேயாஸ் ஐயர், கொரோனா அச்சுறுத்தலால் வீட்டிலேயே இருக்கும் வீரர்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் சில மாயாஜால வித்தைகளைப் கற்றுவருகிறார். இவர், வித்தைகளை கற்கும் வீடியோ பதிவை பிசிசிஐக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள டுவிட்டர் வீடியோ பதிவில், ஸ்ரேயாஸ் ஐயர் தனது தங்கை நடாஷாவுடன் இணைந்து, சீட்டுக்கட்டுகளை வைத்து மாயாஜாலம் செய்வது போன்ற காணொலியைப் பகிர்ந்துள்ளது.