திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி இண்டியன் ரெட் கிராஸ் சொசைட்டி, பாரதமாதா சேவை நிறுவனங்கள், இணைந்து கொரோனோ வைரஸ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கும், பேருந்து ஓட்டுநர்கள்,நடத்துனர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் சோப்பு தண்ணீர் கொண்டு கை கழுவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இண்டியன் ரெட்கிராஸ் சொசைட்டி யின் திருத்துறைப்பூண்டி கிளைச் செயலாளர் டாக்டர் எடையூர் மணிமாறன் தலைமை வகித்தார்.